ADDED : ஜன 20, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த கருங்கானுார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மனைவி சரண்யா, 24; திருமணமாகி 2 ஆண்டாகிறது.
இவர், பொங்கல் பண்டிகைக்கு ஈரியூர் தெற்கு காட்டுக்கொட்டகையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவர், கடந்த 15ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார்.
திடுக்கிட்ட பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை காளியப்பன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சரண்யாவை தேடிவருகின்றனர்.