ADDED : ஏப் 26, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் விவசாயி. இவரது மகள் சரண்யா, 18; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை.
இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.