ADDED : நவ 16, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த கலர்புரத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி மகள் ஷாலினி, 20; பி.சி.ஏ., பட்டதாரி. கடந்த 12ம் தேதி காலை தனது தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

