ADDED : அக் 30, 2025 06:55 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பல் டாக்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலுார் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 52; தற்பொழுது சந்தப்பேட்டை சுப்பிரமணிய நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் அமிர்தவர்ஷினி, 24; பி.டி.எஸ்., படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பெற்றோர் அமிர்தவர்ஷினிக்கு திருமண ஏற்பாடு செய்தனர். இதற்கு அவர் தற்பொழுது திருமணம் வேண்டாம் கூறி வந்தாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் தளத்தில் துாங்கினார். நேற்று காலை 6:00 மணிக்கு மாடிக்குச் சென்று கதவை திறந்து பார்த்தபோது அமிர்தவர்ஷினி துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.
இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

