/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்களின் பெயரில் கடன் பெற்று மோசடி ; பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.,யிடம் புகார் மனு
/
பெண்களின் பெயரில் கடன் பெற்று மோசடி ; பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.,யிடம் புகார் மனு
பெண்களின் பெயரில் கடன் பெற்று மோசடி ; பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.,யிடம் புகார் மனு
பெண்களின் பெயரில் கடன் பெற்று மோசடி ; பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.,யிடம் புகார் மனு
ADDED : ஜன 06, 2025 11:59 PM

கள்ளக்குறிச்சி; திருநாவலுார் அருகே பல பெண்களின் பெயரில் ,பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று மோசாடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி., ரஜசத்சதுர்வேதியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
உளுந்துார்பேட்டை அடுத்த இருந்தை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மனைவி சுகந்தி,43; இவர், அதே கிராமத்தில் செல்வ விநாயகர் மகளிர் குழு அங்கத்தினராகவும், கிராம ஊராட்சியின் வங்கி தொடர்பாளராகவும் உள்ளார். இதனை பயன்படுத்தி மகளிர் குழுவில் உள்ள ஜெயலட்சுமி, தனலட்சுமி, பாஞ்சாலி, வசந்தி உள்ளிட்ட 13 பெண்களின் ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பல தனியார் வங்கி மற்றும் பைனாஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.
அதேபோல் வங்கி தொடர்பாளர் என்பதால் எப்சிபா ஜெனோலின் ரியா என்பவரிடம் அரசு சார்பில் இலவச கழிப்பிடம் கட்டுதற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி ஆவணங்களை ஏமாற்றி வாங்கி சென்று தனியார் பைனாஸ் நிறுனத்தில் கடன் பெற்றுள்ளார். மாதத்தவணை பணம் கட்டாததால் தனியார் பைனாஸ் நிறுவனத்தினர் எங்களிடம் வந்து பணம் கேட்டனர். அப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், சுகந்தியிடம் சென்று கேட்டபோது, அனைவரது பெயரிலும் பெற்ற பணத்தை கட்டிவிடுவதாக கூறினார். இந்நிலையில், தற்போது சுகந்தி  தலைமறைவாகி விட்டார். இதனால், தனியார்  பைனாஸ் நிறுவனத்தினர் நீங்கள் தான் பணத்தை கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக திருநாவலுார் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெண்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் மோசடி மோசடி செய்த சுகந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உள்ளது.

