sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

/

குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி


ADDED : ஏப் 14, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

இந்தாண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய கணக்கின்படி, 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு வரும் ஜுலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், 11 மாதிரித்தேர்வுகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடக்க உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் வரும், 19 ம் தேதி காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.

மேலும் மாதிரித்தேர்வுகள் வரும் 22 ம் தேதி முதல் துவங்கி நடக்க உள்ளன. தேர்வுகள் சேலம் மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வடிவமைக்கப்பட்ட வினாத்தாள்களை கொண்டு முழுப் பாடதிட்டத்திற்கும் நடத்தப்படும்.

பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் வரும் 16 ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us