ADDED : நவ 02, 2025 11:31 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுநர் செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் முருகன் வரவேற்றார், முகாமிற்கு நிதியுதவி வழங்கிய மகாலட்சுமி சாமில் டிம்பர்ஸ் உரிமையாளர் முஸ்தபா சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் கார்த்திகா முகாமில் பங்கேற்ற 180 பேருக்கு சிகிச்சை அளித்தார்.
அதில் 53 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமிற்கான பணிகளை ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுரேஷ்பாபு, ராமலிங்கம், மதியழகன், நிர்வாகிகள் பாண்டியன், கோவிந்தன், முத்துராமலிங்கம், கந்தசாமி, பாலா, சுப்பிரமணியன், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

