sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் இருந்து அரசு அலுவலகங்கள் இடமாற்றம்! நகரின் வளர்ச்சி தடைபடுவதாக மக்கள் குற்றச்சாட்டு

/

திருக்கோவிலுாரில் இருந்து அரசு அலுவலகங்கள் இடமாற்றம்! நகரின் வளர்ச்சி தடைபடுவதாக மக்கள் குற்றச்சாட்டு

திருக்கோவிலுாரில் இருந்து அரசு அலுவலகங்கள் இடமாற்றம்! நகரின் வளர்ச்சி தடைபடுவதாக மக்கள் குற்றச்சாட்டு

திருக்கோவிலுாரில் இருந்து அரசு அலுவலகங்கள் இடமாற்றம்! நகரின் வளர்ச்சி தடைபடுவதாக மக்கள் குற்றச்சாட்டு


ADDED : பிப் 05, 2025 10:17 PM

Google News

ADDED : பிப் 05, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் ; திருக்கோவிலூரில் இருந்து அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றாக இடம் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்,

நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலுார் நகரம், பண்டைய காலத்தில் இருந்தே பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தில் இருந்த போதும், தனித்தன்மையுடன் விளங்கியது.

ஆனால் தற்போது, இந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இதற்கு காரணம், மாவட்டங்களை பிரித்தது தான் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன


திருக்கோவிலுாருடன் பின்னி பிணைந்திருந்த அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இதனால், திருக்கோவிலுாரில் இருந்த ரயில் நிலையம், மார்க்கெட் கமிட்டி, அரசு போக்குவரத்து கழக பணிமனை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ந்தது. மாவட்ட கல்வி அலுவலகம் முழுமையாக கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் பிரிக்கப்பட்டு திருவெண்ணெய்நல்லுார் சென்று விட்டது.

இதேபோல், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் பிரிக்கப்பட்டதால் நகரின் வளர்ச்சி சுருங்கிவிட்டது.

இந்நிலையில், நீர்வளத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் எந்த நேரத்திலும் பிரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏனென்றால், அணைக்கட்டின் ஒரு பகுதி மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளது.

இந்த அணையின் மூலம் பயன்பெறுபவர்கள் அனைவருமே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எந்த நேரத்திலும் அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த வரிசையில் தற்போது சந்தப்பேட்டையில் இயங்கும் வனச்சரக அலுவலகம் காலி செய்யப்பட்டு திருவெண்ணெய்நல்லுாருக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு அலுவலகமாக இடமாற்றமாகி வரும் நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை கானல் நீராகும் சூழல் உருவாகி உள்ளது.

நடவடிக்கை தேவை


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக திருக்கோவிலுாரில் இருக்கும் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றாக காலியாகி கொண்டிருப்பது நகரின் வளர்ச்சிக்கு நல்லது கிடையாது.

இது குறித்து அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். திருக்கோவிலூரை, விழுப்புரம் மாவட்டத்தில் இணைத்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்றனர்.






      Dinamalar
      Follow us