/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பலி
ADDED : நவ 05, 2025 10:02 PM
சின்னசேலம்: பூண்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் வசந்த், 26; பி.இ., பட்டதாரி. இவருக்கு சொந்தமாக பூண்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் வசந்த் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். விவசாய கிணற்றின் அருகே வசந்த்தின் காலணிகள் மட்டும் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் தேடி கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த வசந்த் உடலை மீட்டனர். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

