
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; காணை, வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., மழலையர் பள்ளி முதுநிலை மாணவர்களுக்கு, 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆஷத்லிடியா வரவேற்றார். செயலாளர் சந்தான லட்சுமி, துணைத்தலைவர் துர்கா தேவி, துணை செயலாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் முன்னிலை வகித்தனர்.
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லூரி பொருளாளர் சுப்பிரமணியன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சியை தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.