/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம் 27 மனுக்களுக்கு தீர்வு
/
குறைகேட்புக் கூட்டம் 27 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஏப் 15, 2025 09:01 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பொது வினியோக திட்ட குறைகேட்புக் கூட்டத்தில், 27 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் 4, பெயர் நீக்கல் 2, முகவரி மாற்றம் 3, மொபைல் எண் மாற்றம் 11, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் 7 என மொத்தம் 27 மனுக்கள் அளிக்கப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெரியதமிழன், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, தனி வருவாய் ஆய்வாளர் ரேவதி, வட்ட பொறியாளர் சின்னதுரை உடனிருந்தனர்.
ரிஷிவந்தியம்
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.
முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மற்றும் தொலைபேசி எண் மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், பெயர் திருத்தம், மற்றும் பிறந்த தேதி மாற்றம் தொடர்பாக 42 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.