/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம் 435 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம் 435 மனுக்கள் குவிந்தன
ADDED : மார் 05, 2024 07:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 435 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில், பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை என பல்வேறு துறை சார்ந்த 435 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

