/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 12, 2025 01:11 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 46 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார்.
அதில் 46 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.