/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 04, 2024 10:32 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி.ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதில் காவல் நிலையங்களில் முறையான தீர்வு கிடைக்காத 34 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் தேவராஜ், குகன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உட்பட மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.