sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கைவினை திட்டம்; கலெக்டர் அழைப்பு

/

கைவினை திட்டம்; கலெக்டர் அழைப்பு

கைவினை திட்டம்; கலெக்டர் அழைப்பு

கைவினை திட்டம்; கலெக்டர் அழைப்பு


ADDED : ஏப் 20, 2025 11:34 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயிற்சி மற்றும் வங்கி கடனுதவி பெற, கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கைவினை திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், சிற்ப கைவினைஞர் உள்ளிட்ட பல்வகை கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தொழில்திறன் சார்ந்த மேம்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் கருவிகள் கொண்டு தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை அடமானம் இன்றி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளன.

கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும். சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

தொழிலில் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள, 35 வயதுக்கு மேற்பட்டோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.95/2ஏ2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நேரிலும், 04151-294057 என்ற எண்ணிலும் கேட்டறியலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கலைச்செல்வி உடன் இருந்தார்.






      Dinamalar
      Follow us