sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்று இடம் வழங்கக் கோரி வீடு இழந்தவர்கள் சாலை மறியல்

/

மாற்று இடம் வழங்கக் கோரி வீடு இழந்தவர்கள் சாலை மறியல்

மாற்று இடம் வழங்கக் கோரி வீடு இழந்தவர்கள் சாலை மறியல்

மாற்று இடம் வழங்கக் கோரி வீடு இழந்தவர்கள் சாலை மறியல்


ADDED : நவ 16, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 16, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மேமாளூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதையடுத்து மாற்று இடம் வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட 144 வீடுகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்கி, வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு திருக்கோவிலுார் - திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 12:00 மணிக்கு கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 150 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us