ADDED : செப் 22, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்,; உளுந்துார்பேட்டை அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 45; சென்னையில் பிளம்பிங் கான்ட்ராக்டர். இவர், சென்னையில் இருந்து கடந்த 16ம் தேதி சொந்த வேலைக்காக கூவாகம் வந்தவர், கடந்த 18ம் தேதி மாலை மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி கிரிஜா அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.