sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு; சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்

/

தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு; சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்

தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு; சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்

தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு; சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : நவ 24, 2024 11:24 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் 100 சதவீதம் உத்யம் பதிவு சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசுகையில் 'விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கினால் அதிக லாபம் பெறலாம். கல்வராயன்மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் தொடங்கலாம்.

சுயதொழில் தொடங்குபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும். மேலும் மாவட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிப்காட் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளது. உத்யம் பதிவு சான்றிதழ் பெறுவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசின் சலுகைகள் மற்றும் கடனுதவிகளைப் பெற முடியும்' என்றார்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா, துணைத் தலைவர் ராஜேஷ் மற்றும் வணிகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us