sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தற்கொலைக்கு துாண்டியதாக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

/

தற்கொலைக்கு துாண்டியதாக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

தற்கொலைக்கு துாண்டியதாக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

தற்கொலைக்கு துாண்டியதாக இன்ஸ்பெக்டர் மீது வழக்கு


ADDED : ஆக 06, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 06, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:முன்னாள் ஊராட்சி தலைவரை தற்கொலைக்கு துாண்டியதாக, இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அத்திப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் நயினா, 65. இவரது தம்பி பன்னீர்செல்வம் இறந்து விட்டார். குடும்ப சொத்து, 37 ஏக்கர் நிலத்தில் நயினா விவசாயம் செய்தார்.

பன்னீர்செல்வம் மனைவி சரிதா, 45, கணவருக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தர நயினாவிடம் கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட பிரச்னையில், இரு நாட்களுக்கு முன், நயினா தன்னை மானபங்கப்படுத்தியதாக போலீசில் சரிதா புகார் அளித்தார். திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, கடந்த 2ல், நயினாவிடம் விசாரித்தார்.

நேற்று காலை நயினா, விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவர் பாக்கெட்டில் இருந்த கடிதத்தில், 'என் தற்கொலைக்கு சரிதா, அவரது கூட்டாளிகள், இனஸ்பெக்டர் ஆகியோர் தான் காரணம்' என, எழுதி இருந்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு பேர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us