ADDED : ஆக 06, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் இரும்பு பைப் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 55; இவர், தனது நிலத்தில் இரும்பு ஷீட்டுகளால் கொட்டகை அமைத்திருந்தார். கடந்த மே மாதம் 18ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுரேஷ் என்பவர், இரும்பு ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இருந்த கொட்டகையை பிரித்து, அதில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப்புகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை தேடி வருகின்றனர்.