/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் 89 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகள் 89 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகள் 89 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகள் 89 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
ADDED : டிச 20, 2024 05:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 89 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகள் 125 பேர் அழைக்கப்பட்டு, அதில் தகுதி வாய்ந்த 89 பேருக்கு மருத்துவ சான்று மற்றும் யு.டி.ஐ.டி., பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.