ADDED : பிப் 19, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மற்றும் அ.தி.மு.க., ஆட்சி சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல்பாபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, நகர செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் குட்டி வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தண்டபாணி, அருணகிரி, நகர செயலாளர் ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய பேரவை செயலாளர் கஜேந்திரமணி நன்றி கூறினார்.