/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் பேரூராட்சியில் ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
/
தியாகதுருகம் பேரூராட்சியில் ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
தியாகதுருகம் பேரூராட்சியில் ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
தியாகதுருகம் பேரூராட்சியில் ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
ADDED : ஜூலை 12, 2025 11:26 PM

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்து திண்ணை பிரசாரம் நடந்தது.
தியாகதுருகம் பேரூராட்சியில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் நடந்த திண்ணை பிரசாரத்திற்கு ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ஒன்றிய செயலாளர் அய்யப்பா முன்னிலை வகித்தனர்.
நகர பேரவை செயலாளர் நம்பி வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் குமரகுரு பங்கேற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி திண்ணை பிரசாரம் செய்தார்.
முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, நகர செயலாளர் பாபு, நகர அவை தலைவர் அய்யம்பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், தேவேந்திரன், பிற அணி செயலாளர்கள் ஜான்பாஷா, சீனிவாசன், தங்கபாண்டியன், ராஜிவ்காந்தி, வினோத், பேரவை இணை செயலாளர்கள் மணிவண்ணன், ராஜேந்திரன், துணை செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.