sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு

/

மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு

மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு

மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு


ADDED : அக் 22, 2025 08:59 AM

Google News

ADDED : அக் 22, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ். இவரது மனைவி சுந்தரி, 50; இவர் நேற்று முன்தினம் இரவு வராண்டாவில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 2:15 மணியளவில், வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், சுந்தரியின் கழுத்தில் கத்தியை வைத்து, செயினை பறிக்க முயன்றுள்ளார்.

திடீரென கண் விழித்த சுந்தரி கூச்சலிடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில், கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மாடியில் துாங்கிக்கொண்டிருந்த மகன் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சுந்தரி காதில் அணிந்திருந்த 1 சவரன் தோடு, கொலுசு ஆகியன திருடுபோனது தெரிந்தது.

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us