sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இணையதளத்தில் புத்தாண்டு வாழ்த்து மோசடி; கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

/

இணையதளத்தில் புத்தாண்டு வாழ்த்து மோசடி; கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

இணையதளத்தில் புத்தாண்டு வாழ்த்து மோசடி; கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

இணையதளத்தில் புத்தாண்டு வாழ்த்து மோசடி; கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 


ADDED : ஜன 01, 2025 07:39 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:

அனைத்து இடங்களிலும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணி லிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு ஏ.பி.கே எனும் அப்ளிகேஷன் பைல் அல்லது லிங்க் செய்தி வருகிறது. அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அந்த அப்ளிகேஷன் பைலையோ அல்லது லிங்கையோ தொடர்பு கொண்டால், உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும்.

மேலும் உங்களது வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள். எனவே வாட்ஸ் ஆப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us