/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
/
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ADDED : டிச 05, 2025 05:48 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கடைகளை அகற்றுவதற்காக நகராட்சி ஊழியர்கள் முற்பட்டபோது வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் 108 கான்கிரீட் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இங்கிருந்த குளத்தின் மீது கட்டப்பட்டிருப்பதால், மழை காலங்களில் மார்க்கெட் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறிவிடும். மேலும் கடைகள் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் நகராட்சி சார்பில் இந்த கடைகளை இடித்துவிட்டு அப்பகுதியில் இரண்டடுக்கில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக தீர்மானிக்கப்பட்டது. நகராட்சி ஆணையத்திடம் இதற்கான அனுமதி பெறப்பட்ட நிலையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, கடைகளை அகற்றிக்கொள்ள வலியுறுத்தினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் சார்பில் நகராட்சிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஒரு மாதம் முன்பாக வெளிவந்த கோர்ட் தீர்ப்பின்படி கள்ளக்குறிச்சி காய்கறி மார்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டுவதனால் பழைய கடைகளை அகற்றிக்கொள்வதில் விலக்கு அளிக்க முடியாது. அத்துடன் அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கு புதிய வணிக வளாகத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக்கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஒருசிலர் கடைகளை அகற்றிக்கொண்ட நிலையில் பொங்கல் பண்டிகை பாதிக்கும் எனக்கூறி பலர் கடைகளை அகற்றிக்கொள்ளாமல் தொடர்ந்தனர்.
இவர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த நவ.30ம் தேதிக்குள் கடைகளை கட்டாயம் காலி செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கெடு தேதிக்கு பின்னரும், வியாபாரிகள் பலரும் கடைகளை அகற்றிக்கொள்ளாமல் நீடித்தனர்.
இவர்களிடம் கடைகளை காலி செய்ய நகராட்சி ஊழியர்கள் முற்பட்டபோது, வியாபாரிகள் கடையை காலி செய்ய அவகாசம் கேட்டு, ஊழியர்களை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்கள் திரும்பிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

