sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

/

 கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

 கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

 கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு


ADDED : நவ 27, 2025 05:06 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சப் இன்ஸ்பெக்டர் நிர்வகித்து வந்த 280 போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம், கீழ்குப்பம், கரியாலுார், ரிஷிவந்தியம், மணலுார்பேட்டை, வடபொன்பரப்பி, எலவனாசூர்கோட்டை, எடைக்கல் ஆகிய 8 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

அதேபோல், கடலுார் மாவட்டம், ராமநத்தத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார். மேலும், வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டராக விவேகானந்த், எலவனாசூர்கோட்டை இன்ஸ்பெக்டராக ஆனந்தன், கீழ்குப்பம் இன்ஸ்பெக்டராக அமலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்களில், 5 ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரியாலுார், மணலுார்பேட்டை, வரஞ்சரம் ஆகிய 3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us