ADDED : ஏப் 28, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்:
அனுமனந்தல் கிராமத்தில் குடும்ப தகராறில் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் அடுத்த அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 47; விவசாய கூலித் தொழிலாளி. இவர், மது போதைக்கு அடிமையாகி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த முருகேசனை அவரது மனைவி பச்சையம்மாள் கண்டித்தார். இதனால், மனமுடைந்த அவர் மாடியில் துாங்கச் சென்றவர் அங்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

