ADDED : அக் 02, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்தம்பட்டி அடுத்த களமருதுாரில் லயன்ஸ் சங்கம் சார்பில் கால்நடை சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம், மரம் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
முகாமை லயன்ஸ் சங்க இயக்குனர்கள் பஜனை, கலைச்செல்வன், திருமுருகன் துவக்கி வைத்தனர். சுபாஷ் சந்திரபோஸ் வாழ்த்திப் பேசினார்.
விழாவில், சமூக சேவகி அன்னை தெரசா விருதை யுவராணிக்கு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் ராஜசுப்ரமணியன், கனகதாரன், ஜெயஸ்ரீஉட்பட பலர் பங்கேற்றனர்.