ADDED : நவ 24, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் அருகே ஜோசியரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம், போயர் தெருவைச் சேர்ந்தவர் முத்தையன், 42; ஜோசியர். வாசுதேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 37; இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 17ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆனந்த் தனது மனைவி மற்றும் உறவினருடன் சேர்ந்து முத்தையனை தாக்கினார்.
புகாரின் பேரில், ஆனந்த், கங்கேஸ்வரி, ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து ஆனந்தை நேற்று கைது செய்தனர்.