/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 27, 2025 12:18 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 44 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் விமலக்கண்ணன், காது, மூக்கு, தொண்டை டாக்டர் வாசவி, மனநல டாக்டர் காயத்ரி, கண் டாக்டர் சுரேஷ்குமார், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், 55 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 44 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.