நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் கார்த்திகேயன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் ஜெயசீலன், கண் மருத்துவர் சுரேஷ்குமார், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 61 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தகுதிவாய்ந்த, 31 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.