ADDED : மார் 19, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகில், 'மினி' டிராக்டர் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் முருகேசன், 42; இவருக்கு சொந்தமாக குதிரைச்சந்தல் செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தனக்கு சொந்தமான 'மினி' டிராக்டரை வயலில் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணி அளவில் வயலுக்கு சென்று பார்த்தபோது 'மினி' டிராக்டரை காணவில்லை.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.