ADDED : நவ 03, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணலுார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மொபெட்டில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரித் தனர். அதில் அவர் ஓட்டி வந்த மொபெட் கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடமிருந்து திருடி யதும், திருவண்ணாமலை மாவட் டம், அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சந்தோஷ், 23; என்பதும் தெரியவந்தது.
சந்தோஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.