ADDED : ஆக 29, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் திவ்யா, 20; தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.காம்., முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய், கலையரசி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.