ADDED : நவ 02, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மகளை காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ் மனைவி ரஜியா பேகம், 30; திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால் ரஜியாபேகம் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் ரஜியா பேகத்தை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் நுார்ஜான் அளித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

