ADDED : நவ 05, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லி முத்து மகள் நிஷா, 17; கடந்த 2ம் தேதி இரவு 7:00 மணி அளவில் அல்லி முத்து மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் பால் ஸ்டோருக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, மகள் நிஷாவை காணவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

