sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி

/

தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி

தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி

தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி


ADDED : ஆக 02, 2025 07:17 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளித்தனர். புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, ரசாயன கசிவு தாக்குதல் போன்ற பேரிடர் குறித்து விளக்கப்பட்டதுடன், பேரிடர் காலத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை மீட்பது, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், சங்கராபுரம் தீயணைப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us