/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
82 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
/
82 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : பிப் 14, 2025 04:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 82 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ், கண் மருத்துவர் லோகநாயகி, மனநல மருத்துவர் பாக்யராஜ், காது, மூக்கு தொண்டை மருத்துவர் வாசவி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 100 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.
இதில், தகுதியான 82 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.