sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சமூக விரோதிகளால் பாழாகி வரும் நீலமங்கலம் ஊராட்சி துவக்கப்பள்ளி

/

சமூக விரோதிகளால் பாழாகி வரும் நீலமங்கலம் ஊராட்சி துவக்கப்பள்ளி

சமூக விரோதிகளால் பாழாகி வரும் நீலமங்கலம் ஊராட்சி துவக்கப்பள்ளி

சமூக விரோதிகளால் பாழாகி வரும் நீலமங்கலம் ஊராட்சி துவக்கப்பள்ளி


ADDED : அக் 08, 2025 12:02 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; நீலமங்கலம் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகளால் பாழாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 25 மாணவர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர். இரு வகுப்பறைகள் கொண்ட இப்பள்ளியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களும் நாள்தோறும் வேதனையடைந்து வருகின்றனர்.

மாணவர்களுக்கான கழிப்பறை கதவுகளை உடைப்பது, வகுப்பறை சுவர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். அத்துடன் இரவில் கும்பல் கும்பலாக அமர்ந்து மது அருந்தும் மதுபான கூடமாக மாறிவிடுகிறது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சமூக விரோதிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க போலீஸ், கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us