/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வாடகை பாக்கி ரூ.74 லட்சத்திற்கு அறிவிப்பாணை வெளியீடு
/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வாடகை பாக்கி ரூ.74 லட்சத்திற்கு அறிவிப்பாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வாடகை பாக்கி ரூ.74 லட்சத்திற்கு அறிவிப்பாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வாடகை பாக்கி ரூ.74 லட்சத்திற்கு அறிவிப்பாணை வெளியீடு
ADDED : ஆக 27, 2025 07:07 AM
கள்ளக்குறிச்சி : நீண்ட இழுப்பறியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வாடகை பாக்கி தொகைக்கு அரசு அறிவிப்பாணை வெளியானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டது.
அதற்கான மாவட்ட நிர்வாக அலுவலகம் அமைப்பதற்கான கட்டடமாக கச்சிராயபாளையம் மார்க்கெட் கமிட்டியின் இ நாம் அலுவலகம், விவசாயிகள் ஓய்வறை, தானியங்கள் தரம்பிரிக்கும் மையம், 2000 மெ.டன் குடோன், பண பட்டுவாடா அறை, உலர்களம் என 5 கட்டடங் கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 358க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இயங்கிவருகிறது.
அதனை தொடர்ந்து மார்க்கெட் கமிட்டியில் பல்வேறு கட்டடங்கள் படிப்படியாக கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது .
ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை தொகை வழங்குவது குறித்து அரசு சார்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
அரசு நடவடிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் கமிட்டி நிர்வாகிகள் மவுனம் காத்து வந்தனர். கடந்தாண்டு வீரசோழபுரம் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் துவங்கியது.
இன்னும் சில மாதங்களில் கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணி முடிந்து திறப்பு விழா காண உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வாடகை பாக்கி தொகைக்கான அரசு அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு முதற்கட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்ட 5 கட்டடங்களுக்கான வாடகையாக ரூ.74 லட்சத்து 25 ஆயிரத்து 210 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்டடங்களுக்கு வாடகை பாக்கி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆண்கள் பள்ளி கட்டடங்களும் கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான வாடகை குறித்து எவ்வித அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

