நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: வயிற்று வலி தாங்காமல் முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அடுத்த உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன்,70; வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், விரக்தியில் கடந்த வாரம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.
சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.