ADDED : அக் 30, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், : சின்னசேலம் அருகே விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 59; இவரது மனைவி அங்கம்மாள், 50; கடந்த 24ம் தேதி கணவன் மனைவிக்கிடையே சமையல் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த ராமசாமி, விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.