sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்

/

வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்

வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்

வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்


ADDED : நவ 01, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கள்ளக்குறிச்சியில் இருந்து வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளி மாவட்டங்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.

இதனால் கடந்த 2 நாட்களாக பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், போதுமான பஸ்கள் இல்லாததால், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை, அரசு போக்குவரத்துக்கழகம் வாடகை அடிப்படையில் எடுத்து இயக்கி வருகிறது.

தனியார் பஸ்களின் முகப்பு பகுதியில், சிறப்பு பஸ் இயக்கம் எனவும், எந்த வழி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது என்பதற்கான போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த பஸ்களில் கண்டெக்டர் மட்டுமே அரசு ஊழியராக இருப்பர். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த சிறப்பு பஸ்கள், பண்டிகை முடியும் வரை இயக்கப்படும் என, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us