sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை


ADDED : அக் 31, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பாலஸ்தாபன பூஜை நேற்று நடந்தது.

ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள சுவாமி சன்னதிகள், ராஜகோபுரம் புனரைமக்க அறநிலையத்துறை சார்பில் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு நவ. 29ம் தேதி திருப்பணிகள் துவங்கி நடந்து வந்தது.

திருப்பணிகளை முடிக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், பணிகள் தொய்வானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையெடுத்து, ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முயற்சி மேற்கொண்டு திருப்பணி முழுவதும் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து கோவில் திருப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது. வரும் நவ., 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவிலில் பாலஸ்தாபன பூஜை நேற்று நடந்தது. கலச பூஜை, யாகசாலை பூஜை முடிந்து பள்ளியறை மண்டபத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. நாகராஜன், சோமு குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us