/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயணிகள் ஏற்றுவதில் தகராறு; பெண் ஆட்டோ டிரைவர் கைது
/
பயணிகள் ஏற்றுவதில் தகராறு; பெண் ஆட்டோ டிரைவர் கைது
பயணிகள் ஏற்றுவதில் தகராறு; பெண் ஆட்டோ டிரைவர் கைது
பயணிகள் ஏற்றுவதில் தகராறு; பெண் ஆட்டோ டிரைவர் கைது
ADDED : மார் 04, 2024 12:22 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, ஏமப்பேரில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவரை தாக்கிய, பெண் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ச.செல்லம்பட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சிவகாமி, 40; ஆட்டோ டிரைவர்.
இவர், நேற்று முன்தினம் மாலை ஏமப்பேர் ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினார். அப்போது ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த அப்பகுதியின் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் வேலு, 52; இங்கு பயணிகளை ஏற்றக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இதனால், ஏற்பட்ட தகராறில் வேலுவை பெண் ஆட்டோ டிரைவர் சிவகாமி தாக்கி, ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து வேலு அளித்த புகாரின் பேரில், சிவகாமி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

