/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மிளகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மிளகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 09, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை மிளகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி கடந்த 6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை யாக பூஜை நடந்தது.
நேற்று காலை பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, 8:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 8:30 மணிக்கு கோவில் விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றுப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.