sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு

/

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு


ADDED : அக் 06, 2025 11:41 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் ஆட்டோ ஓட்டுநர் சேவை நிதி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி மாவட்ட தலைவர் அருண் தலைமையில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் துரை, நகர செயலாளர் மணிவண்ணன், துணை தலைவர்கள் அன்பு, அருள், டெம்போ ஓட்டுனர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில்;

தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்தும், மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ராபிடோ போன்றவை வரத்து காரணமாக எங்கள் தொழில் நலிவடைந்து அனைவரும் வருமையில் வாடி வருகின்றோம். ஆந்திர அரசு எங்களை போன்றவர்களுக்கு ஆட்டோ சேவை என்ற திட்டத்தின் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.15ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. அதேபோல், தமிழகத்திலும், ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூ.15 ஆயிரம் சேவை நிதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us