/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனித உரிமைகள் குறித்து உறுதிமொழி ஏற்பு
/
மனித உரிமைகள் குறித்து உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 12, 2025 06:55 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மனித உரிமைகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த உறுதிமொழி ஏற்புக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமை தாங்கி, உறுதிமொழி வாசித்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படதக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன், எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளையும் மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், என்னுடைய கடமைகளை செய்வேன், என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவித செயலையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகளை மேம்படுத்த நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் உறுதிமொழி ஏற்றனர்.

