/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை
/
ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை
ADDED : நவ 19, 2025 07:49 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஏரியில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த குளத்துார் ஏரியில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நேற்று காலை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்த கிடந்த முதியவர் சங்கராபுரம் அடுத்த அரூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, 60; என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

